>

இவர்களே சாதனையாளர்களாய்....!

>> Monday, April 26, 2010

சாதனையாளர்களான - இவர்கள்
தோல்வி படிக்கட்டுகளை மிதித்தே
சாதனை மேடைகளிலும்..
சரித்திர பாடங்களிலும் இடம்பெற்றனர்.

இவ்உலகத்தில் எவராலும் முடியாதது
இவரால் முடியும்! - ஆனால்
இவரால் முடியாதது,
எவராலும் முடியாது!

இவரின் விலகாத விடாமுயற்சி,
தளராத தன்னம்பிக்கை,
அயராத கடின உழைப்பு,

இம்மூன்றால் அசைக்க முடியாத
வெற்றியை எளிதாக பெற்றிடும்
இவர்களே சாதனையாளர்களாய்....
தொடர்கின்றனர்.....!

ஏன் அந்த இவர்களாய்
நாம் இருக்கக்கூடாது
நண்பர்களே?

Read more...

காலமே உன் உயிர்

>> Wednesday, April 21, 2010

                                          நண்பா!


இருக்கும் காலங்களை

இருட்டில் தொலைக்காதே..!

தொலைத்தால் மீண்டும்

”இழந்தகாலம்” கிடைக்குமா..?

கிடைத்தால் ”இறந்தகாலம்”

மீண்டும் நடக்குமா..!?

அனைத்தையும் தெரிந்துகொள்.!

மனிதர்களை புரிந்துகொள்.!

உலகத்தினை அறிந்துகொள்.!

நீ எடுத்த வைக்கும்

ஒவ்வொரு அடியும்

சாதனைகளுக்கு

அடித்தளமாகட்டும்..!

சாதனைகளுடன்....

உன் வாழ்க்கைப்பயணம்

தொடரட்டும்.......!

Read more...

பேருந்துக் காதல்..! - தொடர் பதிவு

>> Thursday, April 1, 2010

னைத்து வலைப்பதிவு நண்பர்களுக்கும் வணக்கம். ”பேருந்துக் காதல்” தலைப்பே கொஞ்சம் விவகாரமாகத்தான் இருக்கு. தொடர்பதிவு எழுதிட பிரபலபதிவர்கள் வரிசையில் எப்பொழுதாவது பதிவிடும், வலைப்பதிவு வாசகனாய் இருந்த என்னையும் சேர்த்து வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் பிரபலம்தான் என ஊக்குவித்து இங்கு என்னை அழைத்த எமது அருமை நண்பர் பனித்துளி சங்கர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை இந்த வாய்ப்பின் முலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ந்த தொடர் எங்கே ஆரம்பித்தது என்றும் தெரியல...? எங்கே முடியும் என்று தெரியல...? தொடர் பேருந்தாய் போகிறது....! (அதெல்லாம் உமக்கு எதற்கு அதான் தொடர் பதிவுனு சொல்லிடோம்ல பிறகு எதற்கு ஆராய்ச்சினு மனசுக்குள்ளே திட்டுவது கேட்குது) சரி விஷயத்திற்கு வருகிறேன். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் அதில் பயணியாக இருந்து பதிவுகளை வாசித்து வந்த என்னையும் ஒரு நாள் ஓட்டுனராகவும், நடத்துனராகவும் இருந்து எமது பயண எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்படி நமது நண்பர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க... எமது கற்பனை குதிரையை தட்டி விடுகிறேன். அது தறி கெட்டு ஓடினாலும் நீங்க ஓடாதீங்க.... (ஆமா இப்படியெல்லாம் மொக்க போட்டால் ஓடாம என்ன செய்ய..?)

மது நண்பர் ஒருவர் கல்லூரிச் சென்ற போது அவரது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். கல்லூரிக்குச் சென்ற முதல் இரண்டு ஆண்டுகள் அடிக்கடி பார்த்தாலும் பேசியதேயில்லை... மூன்றாவது ஆண்டின் இறுதிகட்டத்தில்தான் எப்படியும் முடிவு தெரிந்து கொள்ளும் ஆவலுடன் ஒவ்வொரு நாளையும் கழித்தான். இப்படியே நகர்ந்தது அவனது பேருந்தில் ஒருதலை காதல் பயணம்.


ழக்கம் போல் அவன் அன்று கல்லூரிக்குச் செல்ல புறப்பட்டான். கூட்டம் நிறைந்த பேருந்தில் எப்படியோ முண்டியடித்து முன்னேறி உள்ளே சென்றுவிட, சிறிதுநேரத்தில் மற்றொரு பேருந்து நிறுத்தம் வந்தது. உள்ளே வந்ததும் சுற்றும் முற்றும் தேடினான். கடைசி இருக்கைக்கு முன்புறம் சன்னல் ஓரம் அவள் அமர்ந்திருந்தாள். அவளருகில் அமர்ந்திருந்த ஒருபெண் இறங்குவதற்கு எழுந்துவிட, இரண்டு பேர் அமரும் அந்த இருக்கையில் ஒரு இருக்கை யாரும் உட்காராமல் காலியாகதான் இருந்தது. மேலே பார்த்தான் மகளிர்க்காக... என்று எழுதப்பட்டிருந்தது. அவன் பயந்த முகத்துடனும், காதல் பார்வையுடனும் அவள் அருகே சென்று ஏதாவது பேச்சுக்கொடுத்து பேசலாம் என எண்ணினான்.
ப்போது அவள் சிரித்த முகத்துடன், வாங்க.. உட்காருங்க..! என்றால் இவன் பரவாயில்லை இருக்கட்டும்..! என்று பெருமிதமாக கூறினான் உள் ஆசைகளை மறைத்து. அவள் பரவாயில்லை உட்காருங்கள் என்று கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தாள் அவனுக்கு உள்ளுர கொஞ்சம் தெம்பு வந்தது. தன் காதலை சொல்லி விடலாம் என வாயெடுத்தான் அதற்குள் அவள் தன் கைப்பையிலிருந்து நான்காக மடிக்கப்பட்ட ஒரு கடிதத்தை எடுத்தால்... அவனுக்கு தூக்கி வாரிபோட்டது அக்கடிதம் அவள் காதலை அவனிடத்தில் சொல்வதற்கு எழுதப்பட்டது என நினைத்து இவன் கற்பனையில் மிதந்தான்.
வனது கை கால்கள் கொஞ்சம் பயத்திலும் ஆர்வத்திலும் நடுநடுங்கியது. வடிவேலு காமெடி நினைவுக்கு வந்தது. ”Building Strorngu But Basement கொஞ்சம் Weak அது இததானோ...”! என்று புன்முறுவலுடன் நினைத்துக்கொண்டான். அப்பொழுது அவள் கூறினால் ”ஆச்சுவேலி எனக்கு தமில் சரியா வராது” சோ. ”நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க..ப்ளீஸ்..! கொஞ்சம் இந்த லெட்டரை கரைக்சன் பண்ணிதரீங்களா..!” நீங்க தமில்ல நல்லா தப்பு இல்லாம எழுதுவீங்களாமே..! நம்ப ப்ரண்டஸ்ங்க... சொன்னாங்க.. அதான் உங்ககிட்ட கேட்டேன் என்றால் கூலாக....! அவன் அக்கடித்தை படித்து பார்த்தான். நிறைய ர,ற கர, ன,ண கர மற்றும் ல,ள கர பிழைகள் துணைக்கால் எழுத்து (உதாரணம் உங்கலை கதாளிக்கிரேன்) மாற்றி போடப்பட்டு என பல பிழைகள் இருந்தது.

னால் அவன் கூறினான் இதை யாருக்கு எழுதீனிர்களோ..! அவர்களுக்கு இது நிச்சயம் புரியும். அதனால் நீங்க இதை இப்படியே அவர்கிட்ட கொடுங்க.. ஒருவேளை அவருக்கு புரியல்லை என்றால் பெயரை மட்டும் அடித்து எழுதிவிட்டு என்கிட்ட மீண்டும் கொடுங்க.. நான் காத்திருக்கிறேன் என்று நாசூக்காக சொன்னான். (மறைமுகமாக தன் காதலை சொன்ன திருப்தியுடன்..) அதற்குள் அவன் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததால் இறங்கி சென்றுவிட்டான். (நல்வேளை இறங்கிவிட்டான் இல்லையெனில் என்ன ஆகி இருக்குமோ..? ஹி.. ஹி.. ஹி..)


ன்று முதல் இன்று வரை யாராவது சன்னல் ஓரம் அமர்ந்திருந்தாலோ... பயணச்சீட்டு எடுப்பதற்கு கைப்பையில் இருந்து பணம் எடுத்தாலோ... அவனுக்கு இந்த நினைவுகள்தான் வருவதாக.. அடிக்கடி புலம்புவான். சரி நண்பர்களே ரொம் போர் அடிக்க வைத்துவிட்டோனோ..??!! இது போன்ற அனுபவங்கள், புலம்பல்கள் தங்களுக்கோ, தங்கள் நண்பர்களுக்கோ ஏற்பட்டு இருந்தாலோ...! அல்லது பார்த்து ரசித்து இருந்தாலோ நீங்க நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன். தற்போதைக்கு இப்பதிவினை தொடர்பதிவாக எழுதிட நமது கீழ்கண்ட நண்பர்களை அவர்களின் வாசக நண்பர் என்ற முறையில்  நட்புடன்  அழைக்கின்றேன்.

Read more...

நட்பின் பிரிவு

>> Monday, March 8, 2010

“நட்பு மலர்கள்” பிரிவால்

வாடினாலும் அதன் “வாசம்”

என்றும் இதயத்தில் வீசும்...!

சிறகில்லா பறவையும்,

சிறகடித்து பறப்பதென்றால்

“நட்பு” எனும் இறகுகள்

இருப்பதினால் மட்டுமே...!


பாலில் கலந்த நீரைப்போல

எம்இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!

பால்நீரிலிருந்தும் பாலை மட்டும்

பிரித்திடுமாம் அன்னப்பறவை...!

எம்இரத்தத்திலிருந்து

நம்நட்பை பிரிப்பதென்றால்...

எம்உயிர் இவ்வுலகை விட்டு

பிரிந்தால் மட்டுமே...!!

Read more...

எமது கற்பனை கவிதைகள்-2

>> Friday, February 19, 2010



மொழி..!
என்னவள் பேசும் "தமிழ்" அமுத மொழி..!

எப்போதாவது பேசும் "ஆங்கிலம்" கணினி மொழி..!

என்னிடம் பேசுவது "மௌன மொழி"..!

இருவரும் பேசுவது "காதல் மொழி"..!

உச்சரித்துப் பேசினால் "கனிமொழி"..!

உதடுகளால் பேசினால் "தேன்மொழி"..!

எதிர்கால உலகத்தில் பேசப்படும்

"முதல் மொழி" என்னவளின் "பழம்பெரும் செம்மொழி"

அதுவே அனைவருக்கும் "செந்தமிழ் மொழி"..!

 கனவுகள்...!

நண்பர்களே ! கனவு காணுங்கள்....!

 என்னைப்போல் கனவுகளில்

கன்னி அவளை காணாதீர்,

நினைவுகளை பெருக்கிடுவாள்...!

நீராய், கானல் நீராய்... மறைந்திடுவாள்..!

பொய்த்தோற்றம் போட்டுடுவாள்...!

பொல்லாதவனாய் உன்னை ஆக்கிடுவாள்...!

ஆழ்வாராய் இருப்பவனையும்,

போக்கிரியாய் மாற்றிடுவாள்...!

Read more...

படித்ததில் மிகவும் பிடித்த புத்தகம்

>> Thursday, January 14, 2010

படிப் படியாய் படி! புத்தக ஆசிரியரைப் பற்றி:

டாக்டர்.இரா.ஆனந்த குமார் இ.ஆ.ப.
 தமிழார்வமும் தன்னம்பிக்கையும் நிரம்பிய இளைஞர்.கவிதைகளின் காதலர்; கருத்துக்களின் கருவூலர். படிப்பை சுமையாய் நினைக்கும் இளைய தலைமுறைக்கு அதை சுகமாய் மாற்றும் கலையை இந்நூலில் கற்றுத் தருகிறார். கேலி சித்திரங்களுடன், தோழைமை உணர்வோடு பேச்சு நடையில் ஆழ்ந்த கருத்துக்களை அடுக்கிச் சொல்லும் புத்தகமாக இந்நூல் வடிவம் பெற்றுள்ளது.

சுயசரிதைக் குறிப்புகளுடன் கூடிய சுய முன்னேற்றப் புத்தகமாக மலர்ந்துள்ள இந்நூல் இளைய தலைமுறைக்கு பிடித்த ஓர் இளம் எழுத்தாளரை அறிமுகப்படுத்துகிறது எனலாம். இந்நூல் வதம்பசேரி கிராம பள்ளியில் கரி அரைத்ததிலிருந்து பின்லாந்தில் பனி உடைத்தது வரை இவரின் அனுபவங்களை பதிவு செய்கிறது.
அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே!
இங்கு க்ளிக் செய்து படிப் படியாய் படி! நூலை மின் புத்தகமாக படிக்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும், தங்களுக்கு இந்நூல் பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்புத்தகத்தை புரட்டும் வகையில் இங்கே படிக்கலாம்.   

Read more...

படித்ததில் மிகவும் பிடித்த புத்தகம்

படிப் படியாய் படி! புத்தக ஆசிரியரைப் பற்றி:

டாக்டர்.இரா.ஆனந்த குமார் இ.ஆ.ப.
 தமிழார்வமும் தன்னம்பிக்கையும் நிரம்பிய இளைஞர்.கவிதைகளின் காதலர்; கருத்துக்களின் கருவூலர். படிப்பை சுமையாய் நினைக்கும் இளைய தலைமுறைக்கு அதை சுகமாய் மாற்றும் கலையை இந்நூலில் கற்றுத் தருகிறார். கேலி சித்திரங்களுடன், தோழைமை உணர்வோடு பேச்சு நடையில் ஆழ்ந்த கருத்துக்களை அடுக்கிச் சொல்லும் புத்தகமாக இந்நூல் வடிவம் பெற்றுள்ளது.
சுயசரிதைக் குறிப்புகளுடன் கூடிய சுய முன்னேற்றப் புத்தகமாக மலர்ந்துள்ள இந்நூல் இளைய தலைமுறைக்கு பிடித்த ஓர் இளம் எழுத்தாளரை அறிமுகப்படுத்துகிறது எனலாம். இந்நூல் வதம்பசேரி கிராம பள்ளியில் கரி அரைத்ததிலிருந்து பின்லாந்தில் பனி உடைத்தது வரை இவரின் அனுபவங்களை பதிவு செய்கிறது.
அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே!
இங்கு க்ளிக் செய்து படிப் படியாய் படி! நூலை மின் புத்தகமாக படிக்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும், தங்களுக்கு இந்நூல் பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்புத்தகத்தை புரட்டும் வகையில் இங்கே படிக்கலாம்.   

Read more...

எமது கற்பனை கவிதைகள்-1

>> Saturday, January 2, 2010


நினைவலைகள்..!

பெண்ணே !
உன் கனவுகளே இல்லையென்றால்
என்றோ நான் கண்மு்டியிருப்பேன் !
உன் நினைவுகளே இல்லையென்றால்
என்றோ நான் வீழ்ந்திருப்பேன் !
உன்னை காணாமல் இருந்திருந்தால்
எங்கேயோ காணாமல் போயிருப்பேன் !
உன் நினைவால் என் நினைவில்லை !
என்றுமே என்னில் உன் நினைவலை !
உன் நினைவுகள் என்னை நிழலாய் பின்தொடர்ந்தாலும்
உண்மை நிலையில் என் உள்ளத்தில் உன் உருவம் என்னில் கலந்ததால்
நீ இன்றி என் நிழலில்லை ! உன் நினைவின்றி நான் இல்லை !

*****************
சிரிப்பு...!

மௌனக் கதவுகள் இசைந்து திறக்கும் பொழுதும்...
செவ்"வாய்" இதழ்கள் அசைந்து மலரும் பொழுதும்...
பூக்கின்ற பூவே சிரிப்பு...!

*****************
நண்பர்களின் வருகைக்கு நன்றி!
மீண்டும் வருக!
தங்கள் கருத்துகளையும்,
ஓட்டுகளையும்எதிர்பார்த்து
பிரியமுடன் பிரவீன்குமார்.
******************

Read more...

எமது கற்பனை கவிதைகள்-1


நினைவலைகள்..!

பெண்ணே !
உன் கனவுகளே இல்லையென்றால்
என்றோ நான் கண்மு்டியிருப்பேன் !
உன் நினைவுகளே இல்லையென்றால்
என்றோ நான் வீழ்ந்திருப்பேன் !
உன்னை காணாமல் இருந்திருந்தால்
எங்கேயோ காணாமல் போயிருப்பேன் !
உன் நினைவால் என் நினைவில்லை !
என்றுமே என்னில் உன் நினைவலை !
உன் நினைவுகள் என்னை நிழலாய் பின்தொடர்ந்தாலும்
உண்மை நிலையில் என் உள்ளத்தில் உன் உருவம் என்னில் கலந்ததால்
நீ இன்றி என் நிழலில்லை ! உன் நினைவின்றி நான் இல்லை !

*****************
சிரிப்பு...!

மௌனக் கதவுகள் இசைந்து திறக்கும் பொழுதும்...
செவ்"வாய்" இதழ்கள் அசைந்து மலரும் பொழுதும்...
பூக்கின்ற பூவே சிரிப்பு...!

*****************
நண்பர்களின் வருகைக்கு நன்றி!
மீண்டும் வருக!
தங்கள் கருத்துகளையும்,
ஓட்டுகளையும்எதிர்பார்த்து
பிரியமுடன் பிரவீன்குமார்.
******************

Read more...

கரை தொடாத கனவுகள் !!!

About This Blog

அண்மையில் பதிந்தவை

Blog Top Sites

Lorem Ipsum

1

தமிழ் 10

Footer

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP