>

எமது கற்பனை கவிதைகள்!

>> Saturday, November 28, 2009

என் வலை உலக தமிழ் நண்பர்களே!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவிட்டுளேன்
பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும்,
ஓட்டுகளையும் பதிவு செய்யுங்கள்!
இப்படிக்கு வலைப்பதிவு வாசகன்.


பெண்ணே !

உன் ஓரப்பார்வை அம்புகளால் தாக்கப்பட்டு

காயம்பட்ட வேடன் நான் !

உன் காந்தப்பார்வை வலை வீச்சீல்

மாட்டித்துடிக்கும் மீனவன் நான் !

உன் நினைவுகளுடன் உருகி,

உனக்காகவே வாழ்ந்து,

கனவுகளுடன் காத்திருக்கும் மூடன் நான் !

***********

பெண்ணே !

மரங்களுக்கு மழைக்காலம் போல்

பறவைகளுக்கு குளிர்காலம் போல்

விலங்குகளுக்கு கோடை காலம் போல்

உன்னை நினைக்கும் ஒவ்வொரு காலமும்

என்னில் வசந்த காலம் ! ஆனாலும்

நீ என்னிடம் பேசியது இறந்தகாலம் !

நான் எனக்குள் பேசுவது நிகழ்காலம் !

உன் நினைவுகளால் என்னாகுமோ என் எதிர்காலம் !

*************

பெண்ணே !

உன் நினைவுகளின் வரவு என்னை விட்ட நீங்காத செலவு !

உன்னால் தன்னம்பிக்கையை என்னுள் கூட்டிக்கொள்கிறேன் !

உனக்கு பிடிக்காததை என்னில் கழித்துக்கொள்கிறேன் !

உன்னை நினைத்தே என் திறமையை பெருக்கிக்கொள்கிறேன் !

உனக்காகவே என் வாழ்க்கையை வகுத்துக்கொள்கிறேன் !

என்றும் உன்னை எனக்கு 100 சதவீதம் பிடித்திருப்பதால்.....!

*************
நண்பர்களின் வருகைக்கு நன்றி!
மீண்டும் வருக!
தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
பிரியமுடன் பிரவீன்குமார்.

1 கருத்துரைகள்:

பிரவின்குமார் January 2, 2010 at 12:21 AM  

கவிஞர் பனித்துளி சங்கர் நண்பரே!!!
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகள் தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி!நன்றி!நன்றி!மீண்டும் வருக!

என்றும் நட்புடன்
பிரியமுள்ள பிரவீன்குமார்.

தங்களது கருத்துகளை பகிர்ந்திடுங்கள்
அவசியம் தமிழில் சொல்லுங்க.
Loading...

கரை தொடாத கனவுகள் !!!

About This Blog

அண்மையில் பதிந்தவை

Blog Top Sites

Lorem Ipsum

1

தமிழ் 10

Footer

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP